பாராலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

0

தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.

குறித்த போட்டியில் இந்திய வீராங்கனை அவணி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

மேலும் பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply