கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பருக வேண்டிய நீரின் அளவு!

0

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுகுறித்த தகவலை அவர் தெரிவித்திருந்தார் .

மேலும் தொற்றாளர்களின் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு நிலை ஏற்படக்கூடும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் குறித்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply