இலங்கையில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

0

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் சில பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply