ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள்
வைத்திருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் 43 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக இன்று
நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப் படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.



