யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகவீனம் அடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார் மகளுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதும் வைத்தியசாலையிலிருந்து பயத்தில் தப்பியோடி சென்றுள்ளார்.
இதற்கமைய இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில் இவ்வாறு தப்பியோடிய நபரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள் அவருக்கு பரிசோதனையை மேற்கொண்டனர்.
மேலும் குறித்த பரிசோதனையில் அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



