எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் சில வகைப் பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட்
பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்வதற்கு , விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படவுள்ள நிலையில் அதனை மீறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினம் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத லன்ச்ஷீட்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



