பசில் ராஜபக்ஷவின் வருகையினால் பறிபோன பவித்ரா வன்னியாராச்சியின் ஆசனம்!

0

இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவரது ஆசனத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அவருக்கு 9வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னால் குறித்த ஆசனம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு என ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பசிலின் வருகையினையடுத்து சுகாதார அமைச்சருக்கு பத்தாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆளும் கட்சியின் முன்வரிசை அமைச்சராக இருந்த பவித்திரா வன்னியாராச்சிக்கு பசில் ராஜபக்ஷவினால் பின் வரிசைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply