தம்பதியர் கருத்து வேறுபாட்டை தீர்க்கும் கல்யாண நவக்கிரகம்

0

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும்.

திருமணமானவர்களில் பலரும் தங்களின் வாழ்க்கையை இன்பமயமாகவே வாழ்கிறார்கள். ஆனால் சிலருக்கு விவாகம் என்பது விவகாரமாகவும், இன்னும் சிலருக்கு விவாகரத்திலும் முடிந்து விடுகிறது.

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும். வாழ்க்கை வளமாகும்.

சிவகங்கை மாவட்டம் கீழ்ச்சிவல்பட்டி அருகில் உள்ள ஆவினிப்பட்டி மற்றும் காரைக்குடி அருகில் உள்ள மானகிரி மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநீலக்குடி ஆகிய ஊர்களில் கல்யாண நவக்கிரகங்கள் உள்ளன. அங்கு சென்று வழிபட்டால் தம்பதியர் களுக்குள் வரும் தகராறுகள் தீரும்.

சுய ஜாதகப்படி யோக பலம் பெற்ற நாளில் சென்று நவதான்ய தானம் கொடுத்து நவக்கிரகங்களுக்கு வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்து முறைப்படி வழிபட்டு வருவது நல்லது. இந்த வழிபாட்டின் மூலம் கல்யாண வாய்ப்புகளும் கைகூடும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply