விகாரி வருட வெண்பா பாடல்

0

தமிழ் வருடங்கள் அறுபதில் விகாரி வருடம் பற்றி முற்காலத்தில் சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடல் இது:

பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்
பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்.


இதன் பொருள்:

விகாரி வருடத்தில் மழை குறைவினால் குளம், கிணறு, ஆறு போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குறையும். அதனால் பயிர் விளைச்சல் குறையும். வேளாண்மை திருப்திகரமாக இருக்காது. நட்புக் குறைவு ஏற்படும். ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பழகுவதில் பயம் அதிகம் உண்டாகும். பற்றாக்குறை அதிகரிப்பினால் நம் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தையர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை உருவாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply