சகல துன்பங்களும் நீங்க சனீஸ்வரனுக்கு செய்ய வேண்டிய விரத வழிபாடு

0

அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழறை ஆண்டு சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும்.

பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி முனிவர்கள் தேவரேமும் மூர்த்திகள் முதலியானார்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக்கருள் செய்வாயே! என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப் பெற்று நீண்ட ஆயுள் கிடைக்கும்.

இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்கவேண்டும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply