அபிஷேகம் செய்யும் போது முகம் சிவக்கும் ஆஞ்சநேயர் பற்றி தெரியுமா..?

0

தஞ்சை-கும்பகோணம் சாலையிலுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலில் ராம பக்த காரியசித்தி ஆஞ்சநேயர், வடக்கு நோக்கி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு நம் பிரார்த்தனையை மனதில் நினைத்து கோயிலில் தரும் மட்டைத்தேங்காயைத் துணியில் மூடி சந்நதியில் கட்டி விடுவர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம், ஆராதனைகள் செய்வர். அப்படி அபிஷேகம் செய்யும் போது ஆஞ்சநேயரின் முகம் படிப்படியாக சிவப்பு நிறத்திற்கு மாறுவதையும், திருமுகத்தில் ஓடும் நரம்புகளையும் காணலாம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply