21 நாட்களில் அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? அப்போ இந்த பொருட்களையெல்லாம் படுக்கைக்கு கீழ் வையுங்க..!

0

சில விஷயங்களைப் பற்றி சொல்லும்போது நமக்கே கேலியயாக இருக்கும். உதாரணத்துக்கு பில்லி சூனியம், அதிர்ஷ்டம், வசியம் போன்றவற்றைப் பற்றி சொன்னால் உணன்னு வேற வேலையே இல்லையா?… அதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை என்று சொல்வதுண்டு.

ஆனால் உண்மையிலேயே சில விஷயங்கள் அறிவியல் ரீதியாகவும் செயல்படுகின்றன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற எல்லா விஷயங்கயுமே இயக்குவது நம்முடைய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள இந்த பிரபஞ்சத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் தான் காரணம்.

அதனால் எதிர்மறை ஆற்றல்களைக் கட்டுப்படுத்தத் தெரிந்து நேர்மறை ஆற்றல்களை அதிகமாக வெளிப்படுத்தினால் நமக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும். அந்த ஆற்றல்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

ஒரு மனிதனுக்கு கோபம் மிகவும் ஆபத்தானது. எனவே அத்தகைய கோபத்தைக் குறைக்க இரவில் படுக்கும்போது, கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு ஓரத்தில் செம்புப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்து, தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக்கட்டையை வைத்து தூங்க வேண்டும்.

மன உறுதி குறைவாக இருப்பதாக நினைப்பவர்கள் அந்தப் பிரச்சனையைப் போக்க, படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் வெள்ளி ஆபரணம் ஏதேனும் ஒன்றை எப்போதும் அணிந்துக் கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு தைரியம் அதிகரிக்க, இரவில் படுக்கும் போது, தலையணைக்கு அடியில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வைத்து, வெண்கலப் பாத்திரத்தில் நீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

அதிர்ஷ்டம் உங்களைத்தேடி வர வேண்டுமானால், வெள்ளியால் செய்த மீனை படுக்கும் போது, தலையணைக்கு அடியில் வைத்தோ அல்லது நீர் நிரப்பிய வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தோ உறங்க வேண்டும்.

21 நாட்கள் இரவில் படுக்கும் போது, இரும்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதை கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு அருகில் வைப்பதோடு, நீல நிறமுள்ள கல்லை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால், கண் திருஷ்டி விலகும்.- Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply