வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருக தினமும் பெருமாளுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

0

பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஏகாதசி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ரங்கநாதாஷ்டகம்
ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்

பொருள்:

ஏழு மதில்களால் சூழப்பட்ட பிராகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply