இந்த ஒரு பொருள் உங்கள் பர்சில் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.

0

பலரும் இப்படி சொல்ல நாம் கேள்விப்பட்டதுண்டு. இந்த பர்ஸ் மிகவும் ராசியானது இதில் பணம் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்றும் வீண் விரயம் ஆகாது என்றும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர்களுக்கு பணம் வந்தால்முதலில் தான் வைப்பார்கள் அதில் எப்போதும் பணம் இருக்கும் படியும் பார்த்துக் கொள்வார்கள். அதை போல் வீட்டிலும் சில இடங்களில் பணம் வைத்தால் சேரும் என்ற ஒரு நம்பிக்கையையும் எண்ணமும் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் ஒரு சிலருக்கு பரிசல் எப்பொழுதும் பணமே நிற்காது, என்ன சம்பாதித்தாலும் எவ்வளவு வந்தாலும் பரிசில் தங்காமல், எப்போதும் அது காலியாகவே இருக்கும். இப்படியும் ஒரு சிலருக்கு நடக்கத் தான் செய்கிறது.அப்படிப்பட்டவர்களுக்கான சில தகவல்கள் தான் இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்கிறோம்.

ஒரு சில பொருட்களை பரிசில் வைத்தால் பணவரவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது அது என்ன பொருள் என்பதை பார்த்து விடலாமா. பணத்தை ஈர்க்க சக்தி வாய்ந்த பொருள் கீழாநெல்லி செடியின் வேர். இந்த வேர் அத்தனை தெய்வம்சம் நிறைந்தது. இந்தச் செடியை பணம் வரவிற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

இந்த கீழாநெல்லி செடியானது பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடியது தான். இந்த செடியை ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் எடுக்க வேண்டும். மற்ற நாட்களில் இந்த செடியை எடுக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்து முடித்த பிறகு, இந்த செடியை எடுப்பதற்கு முன்பாக மஞ்சள் கலந்த தண்ணீரை இந்த செடியின் மேல் நன்றாக தெளித்து விட்டு செடியை லேசாக பிடுங்கினால் போதும் செடி வேருடன் வந்து விடும். மற்றபடி வேருடன் எடுப்பதற்காக எந்த ஒரு இரும்பாலான ஆயுதத்தையும் பயன்படுத்த கூடாது.

இப்படி எடுத்த செடியை வீட்டிற்கு கொண்டு வந்து நல்ல தண்ணீரில் அலசிய பிறகு உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி இந்த செடிக்கு தீபாராதனை காட்டி முடித்த பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொண்டு செடியின் வேரை மட்டும் நறுக்கி எடுத்து உங்கள் பரிசில் வைத்து விடுங்கள்.

இந்த வேர் இருக்கும் இடத்தில் பண வரவு நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் கூட இந்த வேரை வைக்கலாம். மிக மிக சக்தி வாய்ந்த ஆன்மீக பரிகாரங்களில் இதுவும் ஒன்று. இதை உங்கள் பர்சில் வைத்த பிறகு உங்களுக்கு நடக்கும் பல நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள். நம்பிக்கையுடன் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் பலன் அதிகம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பணம் வரவை பெற்று நல்லதொரு வாழ்க்கை வாழுங்கள்.

Leave a Reply