இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
நேற்று பாதிப்பு 847 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 65 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் 2 பேர், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகாவில் தலா ஒருவர் என 5 பேர் இறந்துள்ளனர்.
கேரளாவில் விடுபட்ட பலிகளில் 3-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,528 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,024 பேர் மீண்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 22 ஆயிரத்து 562 ஆக உயர்ந்தது.
தற்போது 12,553 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.