மின்வெட்டு நேரம் அதிகரிப்பு: வெளியான புதிய அறிவிப்பு.

0

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(09), நாளை(10) மற்றும் நாளை மறுதினம்(11) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் இரண்டு நாட்களும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply