தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

0

2023ஆம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விநியோகத்தடையை தவிர்க்கும் நோக்கில் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களிடமிருந்து 150 மெகாவாட் அவசரகால மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் இலங்கை மின்சார சபையின் உயர் நிர்வாகம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் மற்றும் சில அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி, 150 மெகாவாட் அவசர மின்சக்திக்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாகத் தொடங்குமாறு, மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன், அக்டோபர் 25 அன்று பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தார்.

எனவே அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் தற்போதைய மின்சார விநியோகத்தடையை இரண்டு மணி நேரமாக அல்லது மூன்று மணி நேரமாக உயர்த்தி மின் நுகர்வைக் குறைப்பதே இப்பிரச்சினைக்குத் தீர்வாகும் என்றும் அந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராவதற்காகவே மின்சார விநியோக தடையை அரசாங்கம் தவிர்க்க முயற்சிப்பதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply