தற்போது இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடி சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது.
இதன்பிரகாரம் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் லஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
மேலும், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு 1954 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



