வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ, இன்று சனிப்பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு இந்த ஒரு பொருளை வைத்து வணங்குங்கள்.

0

சிவபெருமானுக்கு மிக மிக உகந்த நாள் என்று சொன்னால் அது பிரதோஷம். வருடத்தில் ஒரே ஒரு சனி பிரதோஷத் தன்று விரதம் இருந்து வழிபட்டால் அந்த வருடம் முழுவதும் பிரதோஷ வழிபாடு இருந்ததற்கான பலனை அடையலாம். மூன்று சனிப் பிரதோஷத்திற்கு விரதம் இருந்தால் ஐந்து ஆண்டுகள் அவர்கள் விரதம் இருந்து வழிபட்டதற்கான பலனை சனி பிரதோஷம் கொடுக்கும்.

இது ஒன்றே போதும் எத்தனை ஒரு அற்புதமான அருளை அவர் நமக்கு இப்படி இந்த விரதத்தின் வாயிலாக தந்திருக்கிறார் என்று. சிவபெருமானுக்கு பொதுவாக அபிஷேகங்கள் மிகவும் பிடித்தமான ஒன்று. அது எந்த மாதிரியான ஒரு அபிஷேகம் என்றாலும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்வார்.

இவர் அலங்காரம், ஆடை ,ஆபரணம் இதற்கெல்லாம் ஆசைப்படுபவர் அல்ல, பெரிய பெரிய படையல்கள் விருந்துகள் இடத்திற்கெல்லாம் ஏங்குபவரும் அல்ல. மிக மிக எளிமையான ஒரு தெய்வம் என்றால் அது சிவபெருமான் மட்டுமே. உங்களால் இயன்ற எதை வைத்தாலும் மனதார ஏற்று கொள்வார்.  அத்தகைய ஒரு இளகிய மனம் கொண்ட கடவுள் இந்த சிவபெருமான்.

சரி என்ன தான் இத்தனை வகைகளில்ஸஅவரை வழிபட்டாலும் அவருக்கென்று படைக்க ஏதாவது ஒரு விசேஷமான பொருள் இருக்க தானே செய்யும். அப்படி ஒரு விசேஷமான பொருள் என்னவென்றால் தேன். சுத்தமான தேனானது அவருக்கு மிக மிக பிடித்தமான ஒன்று அந்த தேனை நீங்கள் அபிஷேகமாக செய்தாலும் சரி நெய்வேத்தியமாக படைத்தாலும் சரி தேனின் மிகச்சிறந்த குணமே எந்த காலத்திலும் கெடாது என்பதே.

அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த பொருள் தான் சிவபெருமானுக்கு மிக மிக பிடித்த நெய்வேத்திய பொருள். இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து நீங்கள் வணங்கி அவரை வேண்டினாலே போதும் நீங்கள் கேட்கும் வரங்களை எல்லாம் வாரி வழங்கும் தாராள குணம் படைத்த எம்பெருமான் சிவன் ஒருவரே.

இந்த சனிப்பிரதோஷ காலத்தில் அவருக்கு இந்த தேனை வாங்கி வைத்து வழிபட்டு அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் முழுமையாக பெற்று வாழ்க்கையில் வற்றாத செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மிகப் பெரிய உன்னத நிலையை அடைந்து வாழுங்கள்.

Leave a Reply