குடும்ப தோஷமும், சாபமும் வாழ்க்கையில் முன்னேற விடாமல் துரத்துகிறதா?

0

சில பேருடைய ஜாதகத்தை பார்த்தால் சுத்தமாக இருக்கும். எந்த ஒரு தோஷமும் இருக்காது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு அத்தனை கட்டங்களும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. பணம் காசு சம்பாதித்தால் வீண்விரயம் ஆகும். ஏதாவது தொழில் தொடங்கினால் அது நஷ்டம் ஆகும். ஆரோக்கியம் இருக்காது. திருமணம் நடக்காமல் இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும்.

ஆனால் ஜாதகம் அதிர்ஷ்டக்கார ஜாதகமாக இருக்கும். இது சாத்தியமா என்று கேட்டால், நிச்சயம் அது சாத்தியம்தான்.

நேரமும் காலமும் கைகூடி இருக்கும் போது கூட ஒரு குடும்பத்திற்கு நல்லது நடக்கவில்லை என்றால், அந்த குடும்பத்திற்கு இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத தோஷமும் சாபமும் ஏதாவது பின்தொடர்ந்து வரும்.

அதை சரி செய்ய நாம் என்ன செய்வது. பெரிய பெரிய யாகங்கள் செய்து சாஸ்திரப்படி இந்த சாபத்தை விலக்கி விட முடியும். ஆனால் அதற்கு எல்லாம் நமக்கு வசதி கிடையாது.

நாமே சாதாரண குடும்பத்தில் இருக்கின்றோம். என்ன செய்வது. இப்படிப்பட்டவர்களுக்காகவே நம்முடைய சாஸ்திரத்தில் இன்னொரு எளிமையான பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு வாழ்க்கையில் அபரவிதமான முன்னேற்றம் கிடைக்கும். காரிய தடைகள் விலகும். சுப காரிய தடை விலகும்.

இந்த பரிகாரத்திற்கு கட்டாயமாக பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தான் நமக்கு தேவை. சனிக்கிழமை தோறும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஐந்து மண் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். உங்களால் சாமிக்கு என்ன வாங்கிக் கொண்டு செல்ல முடியுமோ, பூ, பழம், துளசி, என்று எதை வேண்டும் என்றாலும் வாங்கி செல்லலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

ஆனால் கட்டாயமாக ஐந்து தீபங்கள் ஏற்றி உங்களுக்கு எத்தனை வயதோ, அத்தனை முறை அந்த பஞ்சமுக ஆஞ்சநேயரை வளம் வந்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்போது உங்களுடைய வம்சா வழியாக தொடரும் சாபங்கள் தோஷங்கள் அனைத்தும் உங்களுடைய குடும்பத்திற்கு நீங்கும்.

அதாவது உங்களுக்கு முன்னால் செய்த முன்னோர்களின் தவறுகள் தான், உங்களை பாதிக்கிறது. இப்போது நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் முன்னோர்கள் செய்த தோஷம் அனைத்தும் விலகி விடும். உங்கள் தலைமையோரையோடு பிரச்சினை தீர்ந்தது. உங்களுக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையை அது பாதிக்காது. அந்த அளவிற்கு கை மேல் பலனை கொடுக்கக்கூடிய பரிகாரம் தான் இந்த பரிகாரம். இதை இத்தனை வாரம்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எப்போதெல்லாம் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய முடியுமோ அப்போதெல்லாம் சென்று தரிசனம் செய்யலாம். வாரம் தோறும் சனிக்கிழமை அன்று வழிபாட்டு செய்தாலும் தவறு கிடையாது.

இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிறைய இடங்களில் உள்ளது. சென்னை சேலம் ஈரோடு நாமக்கல் திருவேற்காடு இப்படி நிறைய இடங்களில் இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளார். உங்கள் வீட்டின் அருகில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை கொஞ்சம் தேடிப் பிடித்து பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

Leave a Reply