இருளில் மூழ்கிய கொழும்பு சிறுவர் வைத்தியசாலை.

0

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

இதன் காரணமாக வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உட்பட பல பிரிவுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 30 மில்லியன் ரூபா கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவது பாரிய அநீதி என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் 16 மில்லியன் மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணம் 8 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும் , ஆகஸ்ட் மாதத்தில் வைத்தியசாலையின் மின் கட்டணம் 13 மில்லியன் ரூபாவாக உயர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply