தற்போது நாட்டில் வாகன உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டவந்த 5 பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச் சொந்தமான பேருந்துகளும் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.