தீபாவளி தினம் மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று (21-10-2022) மாலை அறிவித்துள்ளார்.

இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply