மீண்டும் இலங்கைக்கு அபாய மணிஅடிப்பு.

0

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் வருமானத்தை அதிகரிக்காது, பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் விருப்பமின்றியேனும் கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடும்.

இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் முக்கிய நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில், இங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடன் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இலங்கைக்கு கடன் வழங்கிய மூன்று பிரதான நாடுகளான ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவுடன் பொது மேடைக்கு வந்து, நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பற்றி கலந்துரையாடுவதன் இதன் பிரதான நோக்கமாக இருந்தது.

Leave a Reply