இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் வார இறுதி நாட்களான இன்று (15-10-2022) நாளையும் (16-10-2022) மின்வெட்டு காலம் 01 மணி 20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக PUCSL இன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அக்டோபர் 15 & 16 திகதிகளில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W வலயங்களில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 20 நிமிடங்கள்.

அக்டோபர் 17 – திகதி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W -வலயங்களில் பகல் நேரத்தில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள். மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply