இனி புத்திர பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் கூட, இந்த விளக்கை ஏற்றினால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி.

0

இன்றைய கால சூழ்நிலையில் குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது ஒரு வரமாக இருக்கிறது. அது ஒரு அபூர்வமான விஷயமாக ஆகிவிட்டது. நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் ஐந்தாறு குழந்தைகள் என்று வரிசையாக நிறைய குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார்கள். ஆனால் தற்போது ஒரு குழந்தையை பெற்று வளர்க்கவே சிரமம் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். இதற்கு என்ன காரணம் என்ற ஆராய்ச்சிக்குள் நாம் செல்ல வேண்டாம்.

ஆனால் ஒரு குழந்தை கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியான ஒரு தீர்வைதான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சில பேர் மருத்துவர்களை அணுகியிருப்பார்கள். குழந்தை பேருக்காக சிகிச்சை கூட எடுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தள்ளி போகும். சில பேருக்கு குழந்தை பாக்கியமே கிடையாது என்று மருத்துவர்களால் சொல்லப்பட்டிருக்கும். ஜாதகத்திலும் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி இருப்பார்கள்.

அப்படி இருப்பினும் நீங்கள் நம்பிக்கையோடு இந்த ஒரு வழிபாட்டையும் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இந்த பரிகாரத்தை முருகப்பெருமானை நினைத்து தான் செய்யப் போகின்றோம். சிகிச்சையோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் முயற்சி செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் மேற்கொள்ளும் சிகிச்சையை கைவிடக்கூடாது

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பழமையான முருகன் கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த இரண்டு கிழமையில் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்பது வாரமும் தொடர்ந்து அதே கிழமையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். நேரம் என்பது காலை அல்லது மாலை உங்களுடைய விருப்பம் போல தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply