உங்களால் தீர்க்கவே முடியாது என்று நினைத்த பிரச்சனையையும், மீளவே முடியாத கடன் தொல்லையையும் ஒரே நேரத்தில் சரி செய்யும் கைப்பிடி உப்பு பரிகாரம்.

0

மகாலட்சுமி தாயானவள் கடலிலே தோன்றியவள் அந்த கடலிலே தோன்றியது தான் இந்த உப்பும், தான் தோன்றிய இடத்தில் தோன்றியதாலே இந்த உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே இன்று வரை போற்றப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த இந்த உப்பை வைத்து பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களுக்கான பிரச்சினையை தீர்க்கும் ஆற்றலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கடனை விரைவில் அடைக்கும் யோகத்தையும் இந்த கைப்பிடி உப்பு உங்களுக்கு செய்து கொடுக்கும். அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருள்கள் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு,ஒரு வெள்ளை தாள் இவை இரண்டும் தான் உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்ள உங்களுக்கு உறுதுணையாக இருக்க போகும் பொருள்.

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு சாமி படத்தின் முன் அமர்ந்து கொண்டு வெள்ளை பேப்பரை உங்கள் மடி மீது வைத்துக் கொள்ளுங்கள் . பிறகு உள்ளங்கை இரண்டிலும் கல் உப்பை எடுத்து கைகளை மடித்து இந்த வெள்ளை காகிதத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் விரல்கள் வானத்தை நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். விரல்கள் அனைத்திலும் இந்த கல்லுப்பு பட வேண்டும் அந்த அளவிற்கு உங்கள் கையில் கல் உப்பு இருக்க வேண்டும். இப்போது உங்களின் குல தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு, நான் இந்த பிரச்சனையில் உள்ளேன், இதை தீர்க்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. இதை நான் நிச்சயமாக தீர்த்து விடுவேன். என்றும் அதே போல நான் இந்த கடனில் உள்ளேன் அதை நான் சீக்கிரம் அடைத்து விடுவேன் என்றும், உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்வதாக கூற வேண்டும்.

இப்படி பத்து முறை திரும்பத் திரும்ப இதையே கூறிக் கொண்டு இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து பத்து நாள் இதே போல் செய்து வந்தால் நிச்சயம் பத்து நாள் முடிவதற்குள்ளாகவே உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கான வலிமையும், ஆற்றலையும் தருவதோடு இல்லாமல் உங்கள் பிரச்னைதீர நிச்சயம் வழி பிறக்கும். பூஜை முடிந்தவுடன் இந்த உப்பை அந்த வெள்ளைத் தாளில் கொட்டி எடுத்துக் உங்கள் வீட்டு சிங்கில் கொட்டி தண்ணீரை திறந்து விடுங்கள். உப்பு முழுவதுமாக கரைந்து செல்லும் வரை தண்ணீரை ஊற்றுங்கள். உங்கள் கைகளிலும் இந்த உப்பு இருக்க கூடாது. அதன் பிறகு இந்த வெள்ளைத்தாளை குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். தினமும் இதே போல் புது வெள்ளை தாள், புது கல் உப்பு வைத்து பத்து நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.

Leave a Reply