சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (05.10.2022) இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இவ் அனுமதிபத்திரம் இன்று முதல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply