சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி வீட்டில் கோலாகலமாக நடந்த விசேஷம்.

0

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் என்கிற பாடல் நிகழ்ச்சியை பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

பாடல் நிகழ்ச்சி தான் என்றாலும் எப்போதும் கலகலப்பாக, ஏதாவது புதிய விஷயத்தை செய்துகொண்டே இருப்பார்கள். விரைவில் புதிய சீசன் ஒளிபரப்பாக உள்ளது, அதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவேன் என்று கூறி உள்ளே வந்தவர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்க வெளியான புஷ்பா படத்தில் வாயா சாமி என்ற பாடலை ராஜலட்சுமி பாட பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.

அண்மையில் செந்தில்-ராஜலட்சுமி இருவரும் தங்களது குழந்தைகளுக்கு காதணி விழா ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு.கவிதா ராமு கலந்துகொண்டாராம். இதனை அவர்களே தங்களது பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply