அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

0

ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆயுதமேந்திய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.

அவர் சிறுவர் கடத்தல்களில் ஈடுபட்டவர், அவர் அரசாங்க சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார். அது கடத்தல் மற்றும் குழந்தை வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது.

2021 ஜனவரியில் இலங்கையின் சட்டமா அதிபர் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பாக பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிட்டார்.

தற்போது கிராமப்புறசாலைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆவார். இவர் துப்பாக்கி முனையில் கைதிகளை மிரட்டியதையடுத்து 2021 செப்டெம்பரில் சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

Leave a Reply