நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

0

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth II) மறைவுக்கு இலங்கை நாடாளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Leave a Reply