த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றி வெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்த சென்னை, ஆவடியை சேர்ந்த மாணவி லக்ஷா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த தற்கொலை முடிவு மிகவும் துரதிஷ்டவசமானது. மாணவ, மாணவிகள் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் வேண்டும்.
பெற்றோர்கள் அவர்களுக்கு மன தைரியத்தையும், மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும், உற்சாகத்தையும் அளிக்க வேண்டும்.
தற்கொலை என்றும் பிரச்சினைக்கு தீர்வாகாது. வருங்காலங்களில் இதுபோல் முடிவை மாணவர்கள் எடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.