மனோ விடுத்த பகிரங்க எச்சரிக்கை.

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான புதிய இனவாதக் கூட்டணிக்கு எதிர்வரும் தேர்தல்களில் சிங்கள மக்கள் மகுடம் சூட்டுவார்கள் ஆயின், இலங்கை இரண்டாக பிளவுபடும் நிலைமை ஏற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட மேலவை இலங்கை கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான புதிய கூட்டணி, விரைவில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் கைகோர்க்கும்.

தனது புதல்வர் நாமல் ராஜபக்சவை பட்டத்து இளவரசராக முடிசூட்டும் மஹிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டணி எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விமல் வீரவன்ச தலைமையிலான புதிய கூட்டணியின் பெயரை தமிழ் மொழியில் எழுத்துப் பிழையுடன் வெளியிட்டுள்ளதன் மூலம், தமிழ் பேசும் மக்கள் மீது எந்தவொரு அக்கறையும் அவதானமும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply