பாண் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

0

நாட்டில் மீண்டும் பாண் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (05-09-2022) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சந்தையில் தொடர்ந்து கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், பாணின் விலையை 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வர்த்தகத்துறை அமைச்சருக்கும், பேக்கரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

கோதுமை மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சாதாரண விலையும் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டது. எனவே, பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply