தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவால் கடுமையான மற்றும் பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆறு முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் பொது மக்களால் தாங்க முடியாததாக ஆகிவரும் பின்னணியில் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தின் தாக்கம் பாரிய அளவில் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



