இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 25-ந்தேதி 10,725 ஆக இருந்தது.
அதன் பிறகு 4 நாட்கள் தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது.
அதே நேரம் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 22,031 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 65,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இது நேற்றைவிட 19,199 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 30 பேர் இறந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 5,27,829 ஆக உயர்ந்துள்ளது.