இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பாதிப்பு 5,439 ஆக சரிந்தது.

0

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 25-ந்தேதி 10,725 ஆக இருந்தது.

அதன் பிறகு 4 நாட்கள் தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது.

அதே நேரம் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 22,031 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 65,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது நேற்றைவிட 19,199 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 30 பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,27,829 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply