கடனை கட்டாத விஷால்! கோர்ட் அதிரடி உத்தரவு.

0

நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு செலுத்தப்பவேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாததால் தற்போது கோர்ட் ஒரு அதிரடி உத்தரவை போட்டிருக்கிறது.

நடிகர் விஷால் தனது நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலமாக தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அவர் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தை VFF தான் தயாரித்து வருகிறது.

விஷால் பிரபல பைனான்சியர் அன்புசெழியனிடம் 21.29கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்த நிலையில் அதை லைக்கா நிறுவனம் தான் செலுத்தியது.

விஷாலின் படங்கள் உரிமையை லைகாவுக்கு வழங்க அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் விஷால் அதை மீறி வீரமே வாகை சூடும் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்தார். அதை எதிர்த்து லைகா வழக்கு தொடுத்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷால் 15 கோடி பணத்தை கோர்ட்டில் வைப்பீடாக செலுத்த உத்தரவிட்டது. ஆனால் அதை அவர் செய்யவில்லை. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஷால் தன்னால் ஆறு மாதம் ஆனாலும் அந்த பணத்தை செலுத்த முடியாது என கூறினார்.

விஷால் பொய் சொல்வதாக லைகா தரப்பு கூற, நீதிபத்தில் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply