இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 10,649 ஆகவும், நேற்று 10,725 ஆகவும் இருந்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 43 ஆயிரத்து 89 ஆயிரத்து 176 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 13,528 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரத்து 913 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 3,340 குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 90,707 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 68 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,556 ஆக உயர்ந்துள்ளது.