சென்னை தினம்- தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து.

0

சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை தினத்தையொட்டி கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ” சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது ” என தனது வாழ்த்துகளை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply