இம்மாதம் 27 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள அவசரகால சட்டம் இனி நீடிக்கப்படாது என்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி நாடாளுமன்றில் சுசில் பிரேமஜெயந்த முன்வைக்கப்பட்ட அவசரகால சட்டம் நீடிப்புக்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இம்மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
அதற்கமைய, ஓகஸ்ட் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில் மீண்டும் நாடாளுமன்றின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது தெரியவந்துள்ளது.
எனவே, ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கு பிறகு இந்த சட்டம் தானாக இரத்தாகும் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



