சம்பள பணத்திலிருந்து இந்த தொகையை பூஜை அறையில் இப்படி வைத்தால் தேவையில்லாத செலவு உங்களுக்கு வரவே செய்யாது தெரியுமா?

0

பணத்தை ஈர்க்கும் ஆற்றல் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு உண்டு. இப்பொருட்களை இம்முறையில் வைக்கும் பொழுது உங்களுக்கு பணவரவானது அதிகரிக்க துவங்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நீங்கள் சம்பள பணத்தை வாங்கி வந்த உடன் அதிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வையுங்கள். அதனுடன் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும் போடுங்கள்.

நாணயங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அது போல ரூபாய் நோட்டில் குபேரன் வாசம் செய்கிறார். இந்த நோட்டு மற்றும் சில்லறை நாணயங்களை வைத்ததும் அதனுடன் ரெண்டு ஏலக்காய், ஒரு சிறு துண்டு பட்டை, அண்ணாச்சி மொக்கு ரெண்டு, கிராம்பு 3, மஞ்சள் கொம்பு ஒன்று போட வேண்டும்.

மஞ்சள் மங்களகரமான பொருளாகும். இது குண்டு மஞ்சளாக இருக்க வேண்டும், விரலி மஞ்சள் அல்லது நீட்டு மஞ்சளை பயன்படுத்த வேண்டாம். இந்த மசாலா பொருட்கள் பணத்தை ஈர்க்கும் அதீத சக்தி வாய்ந்த மூலிகை பொருட்களாக இருக்கிறது. இதன் வாசம் பணத்தின் மீது படும்பொழுது, நமக்கு குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் கொண்டு போய் வையுங்கள்.

வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்கலாம். வடக்கில் குபேரன் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது எனவே வடக்கில் இந்த கிண்ணத்தை வைத்துவிட்டு, நீங்கள் எப்பொழுது எல்லாம் பூஜை செய்கிறீர்களோ, அப்பொழுது எல்லாம் அந்த கிண்ணத்திற்கு தூபத்தை மட்டும் காண்பியுங்கள். இதன் வாசம் ஒரு மாதம் முழுவதும் அப்படியே தான் இருக்கும் குறையாது.

மாதக் கடைசியில் இந்த பொருட்களை எல்லாம் எடுத்துவிட்டு அடுத்த மாதம் சம்பள பணத்திலிருந்து மீண்டும் ஒரு 500 ரூபாய், 5 ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து இதே போல அண்ணாச்சி மொக்கு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மஞ்சள் ஆகியவற்றை அதனுடன் வைத்து அப்படியே திறந்த நிலையில் வைத்து விட வேண்டும். இந்தப் பொருட்களை நீங்கள் மறு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம், பிரச்சனை இல்லை. இது போல ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படாது. அனாவசிய செலவுகள், வீண் விரயங்கள் எனப்படும் இந்த தொந்தரவிலிருந்து விடுபடுவதற்கு ரொம்பவே எளிமையான ஆன்மீக பரிகாரமாக இருக்கிறது.

Leave a Reply