யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலே இந்த தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.