குலதெய்வத்தின் மகிமை பற்றி அறிந்து கொள்ளவும், குலதெய்வத்தை கண்டறியவும் இந்த பூஜையை செய்வது நல்ல பலனை கொடுக்கிறது.

0

ஒருவரின் குடும்பம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு.

திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம்.

குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை.

கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும்.

குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
சிலர் கேட்கலாம், எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை என்று இருப்பவர்களுக்கும், எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை.
என்ன செய்வது என்று கேட்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
ஆனால் இவற்றைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம்.

நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு திருநீர் இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி, அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம்.

ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் விரைவாக தெரிய வரும்.

Leave a Reply