மீண்டும் நாடாளுமன்றம் வரும் பசில்.

0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் வெற்றிடமாகும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்று அந்த கட்சி ஆராய்ந்து வருகிறது.

அந்த ஆசனத்திற்கு பசில் ராஜபக்சவையே மீண்டும் நியமிக்க முடியுமா என்றும் ஆராயப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசியப் பட்டியல் எம்.பியாக பதவி வகித்த பசில் ராஜபக்ச மக்கள் போராட்டங்களால் பதவி விலகியதை தொடர்ந்தே அந்த ஆசனத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

Leave a Reply