ரணிலின் பதவி தப்பியது.

0

  பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் , அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Leave a Reply