லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

0

சுமார் 3,700 மெட்ரிக் டன்கள் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பல் இலங்கைக் கடற்கரையை வந்தடைந்ததன் பின்னர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் , அறிக்கைகளில் சிக்கல்கள் இல்லாவிட்டால் எரிவாயுவை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும்தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்று இலங்கை வந்த கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்ட எரிவாயுவின் மற்றுமொரு பகுதி இன்று நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.

அதன்படி, 80,000 முதல் 90,000 வரையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களுக்கு விநியோ கிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply