ஹிமாச்சலில் நிலச்சரிவு: பாறை உருண்டு கார் மீது மோதியதில் ஒருவர் பலி.

0

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்படுகிறது. இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள நிர்மந்த் தாலுகாவில் உள்ள பாகிபுல் என்றி இடத்தில் நேற்று இரவு 10.45 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சாலையில் ஓடும் கார் மீது பாறை உருண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும், இறந்தவர் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த தேவானந்த் என்றும், சஞ்சீவ் குமார், தீபக் குமார் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று மூத்த பேரிடர் மேலாண்டை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply