ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கி உள்ளார் என சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகின்ற தகவலை இலங்கை விமான படை முற்றாக நிராகரித்துள்ளது.
இலங்கை முன்னாள் போலிஸ் அதிகாரி அஜித் தர்மபால, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கி உள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும் அந்த தகவலில் உண்மையீலை எனவும், இது விமான படைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும் என்றும் விமான படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



