இலங்கை அவசர கால தயார்நிலை குழு விடுத்த எச்சரிக்கை!

0

போலியான கோரிக்கைகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான மோசடி முயற்சிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை அவசர கால தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தனிப்பட்ட தகவல்கள் திருடுவது தொடர்பான சம்பவங்கள் பற்றி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு முயற்சிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தகவல்கள் சட்டவிரோத செயல்களுக்கும் போலி சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்குவற்கும் பயன்படும் என இலங்கை கணினி அவசர கால தயார் நிலை குழு எச்சரித்துள்ளது.    

Leave a Reply