பேரழிவை ஏற்படுத்த திட்டமிடும் ரணில் – அம்பலப்படுத்தும் தம்மிக்க பெரேரா.

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சர் ஒரு பேரழிவுக்கு திட்டமிட்டு வருவதாக கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்கும் திட்டம் எதுவும் நிதி அமைச்சரிடம் இல்லை. இலங்கையில் நிலவும் பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலர் நெருக்கடியுடன் தொடர்புடையது எனவும் நிதியமைச்சர் நண்பர்களிடம் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவையான பணத்தைக் கொண்டு வருவதற்கு நிதி அமைச்சரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. டொலர் சம்பாதித்தல், கடன் வாங்குதல், அவசரக் கடன்கள், கடன்களைப் பெறுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

நிதியமைச்சரின் ஆலோசகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply